கடலுக்குள் சென்ற 12 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சென்னை மீனவர்கள் 12 பேர் இன்னும் கரைக்குத் திரும்பாததால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வட கிழக்குப் பருவ மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 23 மீனவர்கள் நான்கு படகுகள் மூலம் மீன் பிடிக்கச் சென்றனர்.
புயல் சின்னம் மற்றும் சூறாவளிக் காற்று ஆகியவை காரணமாக அடுத்த நாள் அவர்கள் கரைக்குத்திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று 6 பேரும், இன்று 5 பேரும் கரைக்குத் திரும்பினர்.
ஆனால் மற்ற 12 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும்காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications