யாழ். தமிழர்களுக்கு உதவத் தயார்: இந்தியா
டெல்லி:உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் யாழ்ப்பாணத்திற்கு உதவிகள்செய்யத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு 50,000 ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், யாழ்ப்பாணத்தையும்,நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடியுள்ளது.இதனால் சாலை மார்க்கமாக நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைநிலவுகிறது. கப்பல் மற்றும் விமானம் மூலமே போக்குவரத்து நடைபெறுகிறது.இதனால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு,எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அங்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும்சில பொருட்களும் கூட அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.இந்த நிலையில் பரிதவிப்பில் உள்ள யாழ்ப்பாணம் மக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்களை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகவோ அல்லது இலங்கையில் உள்ள தமிழ் வியாபாரிகள் மூலமாகவோ இந்தஉதவியைச் செய்ய இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பொருட்களை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இலங்கை அரசு தமிழ்வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகதெரிகிறது.












Click it and Unblock the Notifications