தமிழர்கள் கிராமத்தில் இலங்கை குண்டு வீச்சு
கொழும்பு:இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழர் கிராமம் மீது இலங்கைராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இக்கிராமத்தைப் பிடிக்கும் ராணுவத்தின் முயற்சியை புலிகள்அமைப்பினர் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் வடக்கில் சண்டை மூண்டது. இதில் ஒருராணுவ வீரர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் தற்போது கிழக்குப் பகுதியில் இலங்கை பாதுகாப்புப் படையினர்புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
மடக்களப்பு மாவட்டம் மண்டூர் என்ற கிராமத்திற்கு அருகே இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது. இங்குள்ளராணுவ வீரர்கள், அதிரடிப்படையினர் ஆகியோர் மண்டூருக்குள் ஊடுறுவினர்.
அதேசமயம், விமானப்படை மூலம் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உஷாரான விடுதலைப்புலிகள் ராணுவ வீரர்களை எதிர்த்து கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இதைத் தாக்குப் பிடிக்க முடியாதராணுவ வீரர்கள் பின்வாங்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில் உயிர்ப்பலி குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாககூற்பபடுகிறது. சிலர் காயமடைந்துள்ளனர். இலங்கை ராணுவத்தின் சில பீரங்கிகளும் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications