வளர்மதிக்கு முன்ஜாமீன்; சேகர்பாபுவுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பெட்ரோல் குண்டுகளுடன் அடியாட்களை அனுப்பிய வழக்கில் அதிமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு செங்கல்பட்டுநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு சென்னை உயர்நீதிமன்றம்முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை அருகே உள்ள பழவந்தாங்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில்கலவரத்தைத் தூண்டும் வகையில் பெட்ரோல் குண்டுகளுடன் குண்டர் படையை ஏவி விட்டதாக முன்னாள்அமைச்சர் வளர்மதி, அதிமுக எம்எல்ஏ சேகர்பாபு ஆகியோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கில் சேகர்பாபு கைது செய்யப்பட்டார். வளர்மதி தலைமறைவாகி விட்டார். சேகர்பாபு மீது காரைஅடித்து நொறுக்கியதாக இன்னொரு வழக்கும் போடப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு சில நாட்களுக்குமுன்பு ஜாமீன் கிடைத்தது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்தநீதிமன்றம் இன்று சேகர்பாபுவுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி வளர்மதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைவிசாரித்த உயர்நீதிமன்றம் வளர்மதிக்கு முன்ஜாமீன் வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+