For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தின் முதல் கிறிஸ்தவ பெண் பாதிரியார்கள்
திருச்சி:தமிழக இவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 பெண்கள் பாதிரியார்களாக (கச்ண்ணாணிணூண் )நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக இவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் அமைப்பில் மொத்தம் 105 பாஸ்டர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 300ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக 6 பெண்களுக்கு பாஸ்டர் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பாஸ்டர்களாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. டோரா திலகவதி, கார்னேலியா குணசீலி, ஜீவஜோதி மார்ட்டின், செஷீலா ஞானபாய், வளர்மதி, அட்லின் ரெஜினாபாய் ஆகிய 6 பேருக்கும் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் பாஸ்டர்களாக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
இவர்களோடு சேர்த்து 9 ஆண்களும் பாஸ்டர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Comments
Story first published: Wednesday, November 1, 2006, 5:30 [IST]