பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: டிரைவர் கைது
திருவனந்தபுரம்:பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்த காரை திட்டமிட்ட பாதையில் செலுத்தாமல் வேறு பாதையில் ஓட்டுநர்செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். போலீஸ்அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவுக்கு வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கொலை செய்யப்போவதாக கூறி சமீபத்தில் இ மெயில் மிரட்டல் வந்தது. இதையடுத்து கேரளா முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. இந்த மிரட்டல் தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் ஆளுநர்பாட்டியா, முதல்வர் அச்சுதானந்தன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் அழைத்துச் செல்லப்பட்டார். பிரதமரின் கார் திட்டமிட்ட பாதையில்சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் திடீரென கார் வேறு பாதையில் திரும்பியது.
இதனால் பிரதமரின் பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பிரமதரின் காரைஅணுகிய அதிகாரிகள் காரை சரியான திசைக்கு திருப்பினர்.
கார் ஆளுநர் மாளிகையை அடைந்ததும் பிரதமரின் காரை செலுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடம்விசாரணை நடத்தியபோது, அவர் கேரள காவல்துறையைச் சேர்ந்த ஓட்டுநர் இல்லை என்பதும் வாடகைக் கார்ஓட்டுநர் என்பதும் தெரிய வந்தது.
பிரதமரின் பாதுகாப்பில் இவ்வளவு பெரிய குளறுபடி நடந்ததைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்புப்பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரி பாலச்சந்திரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விளக்க அறிக்கை தருமாறு மாநில டிஜிபிக்கு முதல்வர் அச்சுதானந்தன்உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் கார் பாதை மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.