For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவி இறக்கம்: சிவனாண்டிக்கு இன்னொரு அடி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:டிஐஜி பதவியிலிருந்து எஸ்.பியாக தன்னை பதவி இறக்கம் செய்ததை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்சிவனாண்டி தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவு எஸ்.பியாக இருந்தவர் சிவனாண்டி. இவருக்கு டிஐஜியாக பதவிஉயர்வு கொடுக்கும் வகையில் பணி மூப்புப் பட்டியல் ஒன்றை அதிமுக அரசு தயாரித்தது.

ஆனால் தங்களது பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறி சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பதவி உயர்வுப் பட்டியலை ரத்து செய்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டது. தீர்ப்பாய உத்தரவைக் காரணம் காட்டி சிவனாண்டியை எஸ்.பியாக பதவி இறக்கம் செய்தது திமுகஅரசு.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சிவனாண்டி. இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், சிவனாண்டியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மீண்டும் தீர்ப்பாயத்தை அணுகிய சிவனாண்டி, தன்னை பதவி இறக்கம் செய்தது செல்லாது என்றுஅறிவிக்கக் கோரி நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத் துணைத் தலைவர்சண்முகம், உறுப்பினர் கணேசன் ஆகியோர் சிவனாண்டியின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X