ரயில் விபத்து: 17 பேரின் உடல்களும் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:ரயில் விபத்தில் இறந்த 16 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. ஷேர் ஆட்டோ டிரைவர்மஸ்தானின் உடல் மட்டும் தனியாக முஸ்லீம் முறைப்படியான சடங்குகளை செய்து அடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை கடக்கமுயன்ற ஷேர் ஆட்டோ மீது மின்சார ரயில் மீது மோதியது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 17 பேர் அதே இடத்தில் பரிதாபமாக பலியாயினர்.அனைவரும் ஓரிக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.

துக்கம் விசாரிக்கச் சென்றபோது இவர்கள் அனைவரும் பரிதாபமாக இறந்தனர். பலியானவர்களின் உடர்கள்ஓரிக்கையில் உள்ள பாலாற்று கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு 16 பேரின் உடல்களும் ஒன்றாகப் போட்டு அடக்கம் செய்யப்பட்டது.இதில் ஓரிக்கையைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆட்டோ டிரைவர் மஸ்தான் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஹைதர்பேட்டைக்குகொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மசூதி வளாகத்தில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்க நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+