திமுக-பாமக போடும் டிராமா: இல.கணேசன்
சென்னை:உள்ளாட்சித் தேர்தலால் அதிருப்தி அடைந்துள்ள பாமக தொண்டர்களை சமாதானப்படுத்தவே, திமுகவும்,பாமகவும் மோதிக் கொள்வது போல நாடகம் ஆடியதாக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவும்,பாமகவும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளன. இதிலிருந்தே இருவரும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்திருப்பதுதெரிய வருகிறது.
இது முதல் விரிசல். இது பெரிதாகுமா, இல்லையா என்பது திமுகவின் கையில் உள்ளது. திமுக, பாமக மோதல்நிஜம். ஆனால் இருவரும் விடுத்த அறிக்கை நிஜமா என்பது சந்தேகம் தான். தொண்டர்களை சமாதானப்படுத்தும்வகையில்தான், இருவரும் மோதிக் கொண்டது போல ஒரு நாடகத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் என்றுசந்தேகம் எழுகிறது.
மத்தியில் கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி காதேனுவைப் போன்றது. எனவே கூட்டணியிலிருந்து யாரும் விலகமாட்டார்கள். மக்கள் பிரச்சினையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என பாமககூறவில்லை. அப்படி கூறியிருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் திமுக மீதான கோபத்தால் எதிர்க்கட்சிாயகசெயல்படுவோம் என்று கூறுகிறது பாமக.
தமிழக தேர்தல் ஆணையர் குறித்த உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்தைக் கண்டித்து தி.க. போராட்டம்நடத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதே தேர்தல் ஆணையத்தின்செயல்பாடு, முறைகேடு குறித்து அரங்கத்தில் பேச அனுமதி தர மறுத்துள்ளது தமிழக அரசு. இது என்னபாரபட்சமான நடவடிக்கை?
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததைக் கண்டித்து வருகிற 6ம் தேதி மாவட்ட அளவில் பாஜக சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெறும். இலங்கை தமிழ் அகதிகள் நிலை குறித்து ஆய்வு செய்ய திருநாவுக்கரசர், பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில்ஒரு குழு அகதிகள் முகாம்களுக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications