கோவையில் கன மழை-பல பகுதிகளில் வெள்ளம்
கோயம்புத்தூர்:கோவை நகரில் நேற்று இரவு பெய்த விடாத கன மழையால் நகரின் பல பகுதிகள்வெள்ளத்தில் மிதக்கின்றன.
கோவையில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் மிக பலத்த மழை பெய்தது.இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளமென தேங்கி நின்றது.
காந்தி பூங்கா, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள்தண்ணீர் புகுந்தது.
விமான நிலைய பகுதியில் மட்டும் 12 செமீ மழை பெய்தது. இதனால் நகரின் பலபகுதிகள் நீரில் மிதக்கின்றன. நிாெய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிக்கொண்டுள்ளது.
அதே போல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் கன மழைபெய்துள்ளது.
மீண்டும் 100ஐ தொட்டது மேட்டூர்:
தமிழகம் முழுக்கவுமே தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைமீண்டும் 100 அடியைத் தொட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணை பலமுறை 100 அடியைத்தாண்டி சாதனை படைத்தது. தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக 100 அடியில்நீர்மட்டம் இருந்து வந்தது.
இந் நிலையில் சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர்அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று காலை 99 அடியாகநீர்மட்டம் இருந்தது. இன்று அது 100 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 14,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்துதண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications