நீதிபதியைக் கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோபாத்யாயாவை கண்டித்துசென்னை உயர்நீதிமன்றம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் உயர்நீதிமன்றம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.க.வினர்பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். பின்னர்அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக வீரமணி பேசுகையில், உள்ளாட்சி மன்றத் தேர்தல் மோதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடரப்பட்டது. இதில் மாநில தேர்தல் ஆணையர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கோபாத்யாயாஉத்தரவிட்டார்.

வாக்கு எண்ணும் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அவரால் வர முடியவில்லை.அதற்குப் பதில் தேர்தல் ஆணையரின் செயலாளரான ரங்கராஜ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அனுப்பி வைத்தார்.அப்போது அந்த அதிகாரியிடம், தேர்தல் ஆணைய தலைவர்தான் வர வேண்டும். அவருடைய பியூன் எல்லாம்வரக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த அதிகாரியை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த வார்த்தைகளைஅவர் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோருக்கும்,தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

கோபாத்தியாயாவை உடனடியாக வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ் பேசத் தெரியாத, தமிழைஅறியாத நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்க கூடாது. இதுதொடர்பாக அடுத்த கட்டமாக நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார் வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+