வளர்மதி சரண்; சேகர்பாபு ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:பெட்ரோல் குண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு இன்று ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார். அதே வழக்கில் தொடர்புடைய முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி நீதிமன்றத்தில்சரணடைந்துமுன்ஜாமீன் பெற்றார்.

சென்னை அருகே பழவந்தாங்கல் நகராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலின்போது பெட்ரோல் குண்டுகளைவீசி கலவரம் நிகழ்த்த ஆட்களை அனுப்பியதாக சேகர்பாபுவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில்வளர்மதியும் பின்னர் சேர்க்கப்பட்டார்.

வழக்கில் சேர்க்கப்பட்டதையடுத்து வளர்மதி தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நீதிமன்றத்தில்சரணமடைந்து முன்ஜாமீன்பெற்றுக் கெள்ள வளர்மதிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை பூந்தமல்லி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வளர்மதி சரணடைந்தார். நீதிபதிஅவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். பரங்கிமலை காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தினசரி நேரில்ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என வளர்மதிக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட எம்.எல்.ஏ. சேகர்பாபு இன்று விடுதலைசெய்யப்பட்டார். அவர் மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கி தினசரி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+