வருகிறார் பிரதமர்-வரலாறு காணாத பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக நாளை இரவு சென்னை வருகிறார். இதையொட்டி சென்னைநகரிலும், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் நாளை இரவு 9.15 மணிக்கு தனி விமானம் சென்னை வருகிறார். சனிக்கிழமை மாலைவரை அவர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

சனிக்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடத்தில் நிறுவப்படவுள்ள மத்திய தேசிய வாகன சோதனைஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார்.

அதன் பின்னர் ராஜீவ் காந்தி நினைவிடம் செல்லும் மன்மோகன் சிங் அங்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர்நோக்கியா செல்போன் நிறுவனத்தை சுற்றிப் பார்க்கிறார். ராஜீவ் காந்தி பயிற்சி மையத்தையும் அவர்பார்வையிடுகிறார்.

அதன் பின்னர் பிளக்ஸ்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப் பூங்காவை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும்கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார் பிரதமர்.

திருவனந்தபுரத்திற்கு மன்மோகன் சிங் வந்தபோது பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டு சர்ச்சை எழுந்தது.எனவே பிரதமரின் சென்னை வருகையின்போது இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடாதபடிக்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மொத்தம் 10,000 போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.பிரதமர் செல்லும் வழியில் உள்ள பாலங்கள், உயரமான கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல்கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நாளை இரவு தங்கும் ஆளுநர் மாளிகை வளாகத்திலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+