வைகோ மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி
சென்னை:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் தொடர்ந்த வழக்கைசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பால். இவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோ, விடுதலைப் புலிகளுக்குஆதரவாக பேசினார். வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார். பிரபாகரனை ஆதரித்துப் பேசினார்.
அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யமாறு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால்போலீஸார் புகாரைப் பெற மறுத்து விட்டனர். எனவே வைகோ மீது தேசதுரோகம், தேசிய ஒருமைப்பாட்டுக்குக்குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, வைகோ மீது வழக்கு தொடருவதற்குரிய காந்திர ஆதாரங்களைமனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.












Click it and Unblock the Notifications