இந்தியா-ஏஞ்சலீனாவுக்கு அல்-கொய்தா மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜூலி, நடிகர் பிராட் பிட் ஆகியோருக்கு அல்-கொய்தாஅமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் அவர்களுக்கு இந்தியாவில் ஒய்பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Angelina Jolieதி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் தெற்காசிய செய்தியாளராக இருந்தவர் டேனியல்பியர்ல். பாகிஸ்தானில் தங்கியிருந்து இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைக்காக தகவல் சேகரித்து வந்தார்.

கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அவரை அல் கொய்தா அமைப்பினர்சுட்டுக் கொன்றனர்.

பியர்லின் கதை தற்போது எ மைட்டி ஹார்ட் என்ற பெயரில் ஹாலிவுட்டில்படமாகிறது. இப்படத்தில் பியர்லாக ஹாலிவுட் திடிகர் டான் பிளட்டர்மேனும்,பியர்லின் மனைவியாக ஜூலியும் நடிக்கிறார்கள். கெளரவ வேடத்தில் பிராட் பிட்நடிக்கிறார்.

புனே நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந் நிலையில் ஜூலிக்கும், பிராட்பிட்டுக்கும் அல்கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை இந்திய உளவுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Angelina Jolie and Bradpitகொலை மிரட்டலைத் தொடர்ந்து பிராட் பிட்டுக்கும், ஜூலிக்கும் ஒய் பிரிவுபாதுகாப்பு அளிக்க மகராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் தவிர படக் குழுவினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+