For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23 பேருடன் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ-ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 23 பேருடன் சென்ற ஷேர் ஆட்டோகவிழ்ந்த விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

காஞ்சிபுரம் அருகே புதுப்பாக்கம் என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ மீது ரயில்மோதியதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக இறந்தனர். இந் நிலையில்இன்னொரு ஷேர் ஆட்டோ விபத்து நடந்துள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 22 பேர்வேலாதிப்பாளையத்தில் ஒரு வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக ஷேர் ஆட்டோவில்சென்றனர். ஓட்டுனரையும் சேர்த்து மொத்தம் 23 பேர் அந்த சிறிய ஆட்டோவில்பயணம் செய்தனர்.

துக்க வீட்டிலிருந்து இரவு 10.30 மணியளவில் ஊருக்குத் திரும்பினர். அப்போது கனமழை பெய்தது. பெரிய கவுண்டனூர் என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது,சாலையோரம் கவிழ்ந்து உருண்டது.

இதில் கருப்பசாமி என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 22 பேரும்படுகாயமடைந்தனர். அனைவரும் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X