மதுரை, கோவைக்கு புல்லட் ரயில்: தயாநிதி
சென்னை:சென்னையிலிருந்து மதுரைக்கும், கோவைக்கும் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் இடையிலான புதிய வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர் தயாநிதி மாறன் கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசுகையில், ஒருகாலத்தில் பஸ் போக்குவரத்துடன் போட்டி போட்ட ரயில்வேதுறை இன்று விமான நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது.
ரயில்வே துறையிடம் முதல்வர் கலைஞரும், தமிழக மக்களும் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுதொடரும். கருணாநிதி முன்பு வைத்த கோரிக்கையை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கும், கோவைக்கும் அதி வேக புல்லட் ரயில்களை விட வேண்டும்.இந்த மார்க்கத்தில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த இந்தமார்க்கத்தில் அதிக ரயில்கள் விடுவது அவசியம்.
ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளில் ரயில்கள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் சாதனத்தைப்பொருத்த வேண்டும். இதுபோலச் செய்தால் ரயில் விபத்துக்களை தவிர்க்கலாம். சமீபத்தில் கூட காஞ்சிபுரம்அருகே ஷேர் ஆட்டோ மீது ரயில்மோதி பலர் பலியாயினர் என்றார் தயாநிதி மாறன்.
இந் நிகழ்ச்சியில் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி விளம்பரத் துறை பரிதி இளம்வழுதி, சென்னை மேயர் மா.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.