விரைவில் புதிய தொழில் கொள்கை: கருணாநிதி
சென்னை:தமிழகத்தில் விரைவில் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
எப்.ஐ.சி.சி.சி.ஐ. அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில், கலந்து கொண்டுகருணாநிதி பேசுகையில், முதலீடுகளைக் கவருவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது. அதே சமயம்,அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளோம்.
வேலை வாய்ப்புகள் அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி வேகமடையும். சமூகத்தில் நலிவடைந்தபிரிவினருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
எல்லைகள் அற்ற உலகப் பொருளாதார சந்தையை நோக்கி நாடு சென்று கொண்டுள்ளது. இங்கு போட்டி அதிகம்.நிறுவனங்கள் வர்த்தகத்திற்காக போட்டி போடும் அதே வேளையில், மாநில அரசுகள் முதலீடுகளைக்கவருவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் போராடி வருகின்றன.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் தமிழகம் எப்போதும் முதலிடத்தில் இருக்கும்.உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவு ஆகிய இரண்டுமே சமச் சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். அப்போதுதான்தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications