தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியம் கிடையாது
சென்னை:தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அரசு மானியம் அளிப்பதும், ரத்து செய்வதும் அரசின் உரிமை. மானியம் வழங்கவேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிக் கூடங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குதொடரப்பட்டது. அதில், கடந்த 1999ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி 1999ம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் தனியார் பள்ளிக் கூடங்களுக்கு அரசு மானியம்கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை செல்லாது எனஅறிவிக்க வேண்டும் என்று அதில் பள்ளி நிர்வாகங்கள் கோரியிருந்தன.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், மணிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்புஅளித்தது. அதில், மாணவர்களுக்கு மாநில அரசே இலவசக் கல்வி வழங்குகிறது. மாணவர்கள் படிப்பதற்குத்தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது.
எனவே தனியார் பள்ளிக் கூடங்களுக்கு அரசு மானியம் தரத் தேவையில்லை. அரசிடம் மானியம் கேட்க தனியார்பள்ளிகளுக்கு உரிமை கிடையாது.
மானியம் வழங்குவதை நிறுத்தவோ, வழங்க முடிவு செய்வதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றுதீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications