ராஜீவ் நினைவிடத்தில் பிரதமர், சோனியா அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர்மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று காலைஓரகடத்தில் நடைபெற்ற தேசிய வாகன ஆய்வு மற்றும் சோதனை மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றனர்.அங்கு மலர் தூவி ராஜீவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரோஜா மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியபோதுசோனியாவின் கண்கள் கலங்கிக் காணப்பட்டன. கண்களில் வழிந்தோடிய கண்ணீரை தனது விரல்களால்துடைத்துக் கொண்டார் சோனியா.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கருணாநிதி ராஜீவ் நினைவிடத்திற்கு இன்று வந்தார்.பேட்டரி கார் மூலம் மெயின் ரோட்டிலிருந்து நினைவிடம் வரை அவர் அழைத்து வரப்பட்டார்.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், இளங்கோவன், ஜி.கே.வாசன், தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications