பூரி ஜெகன்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்: 4 பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பூரி:ஒரிஸ்ஸாா மாநிலம் பூரி நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகன்னாதர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி 4 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 7 மணிக்கு கோவிலில் மங்கள ஆலத்தி நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண வழக்கத்தை விட அதிகஅளவிலான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
ஜெகன்னாதர் ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பக்தர்கள் வெள்ளம் போல திரண்டிருந்தனர். மங்களஆலத்தியைக் காண பக்தர்கள் கூட்டம் முண்டியடித்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கீழே விழுந்தனர்.
இந்த நெரிசலில் சிக்கி 4 பேர் பலியாயினர். 25 பேர் படுகாயமடைந்ததாக கோவில் தலைமை நிர்வாகி சுரேஷ்மொஹபாத்ரா கூறினார்.
காயமடைந்தவர்கள் சாதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 2பேர் வழியிலும், 2 பேர் சிகிச்சை பலனளிக்காமலும் இறந்தனர்.












Click it and Unblock the Notifications