சிறுவனை வேலைக்கு வைத்த ஓனர் மீது வழக்கு
நாகப்பட்டனம்:இந்தியாவிலேயே முதல் முறையாக 13 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஹோட்டல் உரிமையாளர் மீதுசிறார் தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இச்சட்டத்தை மீறி சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஅரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சட்டத்தின் கீழ் நாகையைச் சேர்ந்த ஹோட்டல்உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை வந்த தஞ்சையைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பின் நிர்வாகிகளான அமீர் மற்றும் மாதவன் ஆகியோர்,அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் 13 வயது சிறுவன் வேலை செய்து கொண்டிருந்ததைப்பார்த்தனர்.
அவனிடம் அவர்கள் விசாரித்தபோது தனது பெயர் மோகன் என்றும் 6வது வகுப்பு வரை படித்துள்ளதாகவும்,நாகை அருகே உள்ள கருவங்குளத்தடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிவித்தான்.
இதையடுத்து நாகை டவுன் காவல் நிலையத்தில் அமீர் புகார் கொடுத்தார். சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து அச்சிறுவனை மீட்க வேண்டும் என்றுகோரினார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications