தேசிய கீதம் பாடாமல் முடிந்த பிரதமர் நிகழ்ச்சி
சென்னை:பிரதமர் கலந்து கொண்ட தேசிய வாகன ஆய்வு மைய அடிக்கல் நாட்டு விழா தேசிய கீதம் பாடப்படாமல்முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே ஓரகடம் என்ற இடத்தில் தேசிய வாகன ஆய்வு மற்றும் பரிசோதனை மையம்அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கினார். அனைவரும் பேசிமுடித்தவுடன், கடைசியாக மத்திய இணை அமைச்சர் காந்தி சிங் நன்றியுரை வழங்கினார். இதையடுத்து தேசியகீதம் ஒலிக்கப்படும் என அனைவரும் எழுந்து நின்றனர்.
அப்போது மைக் முன் வந்த ஜேம்ஸ் வசந்தன், தலைவர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் நிகழ்ச்சிக்குவந்த பார்வையாளர்கள் வெளியேறுமாறும், அதுவரை இருக்கையில் அமர்ந்திருக்குமாறும் அறிவித்தார்.
ஆனால் தேசிய கீதம் பாடப்படும் என அவர் அறிவிக்கவில்லை. இதனால் தேசிய கீதத்திற்காக எழுந்த நின்றபிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வியப்படைந்தனர். சுதாரித்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,ஜேம்ஸ் வசந்தனிடம் சென்று தேசிய கீதம் ஒலிக்கப்படும் என அறிவியுங்கள் என்றார். ஆனால் வசந்தனோ, அதுநிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லையே என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.
சில விநாடிகள் தேசிய கீதத்திற்காக காத்திருந்த பிரதமர் உள்ளிட்டோர் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி தேசிய கீதம் ஒலிக்கப்படாமலேயே முடிந்ததுசர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்விடுத்துள்ள அறிக்கையில், வந்தே மாதரம் பாடலையே பாட மறுப்பு தெரிவித்தவர்கள், தேசிய கீதத்தைமறந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. சோனியா காந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தேசிய கீதத்தைப்பாட வேண்டாம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ என்று கூறியுள்ளார்.