மதிமுக பஞ்சாயத்துத் தலைவர் படுகொலை
விழுப்புரம்:திண்டிவனம் அருகே மதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக பாமக பிரமுகர் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கேணிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் ராஜேந்திரனும், பாமகசார்பில் ஏழுமலை என்பவரும் போட்டியிட்டனர். இதில் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதனால் ஏழுமலைக்கும்,ராஜேந்திரனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் தேர்தலுக்குப் பின் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் தனது வயலில் ராஜேந்திரன்அமர்ந்திருந்தார். அப்போது ஏழுமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் கும்பலாக அங்கு வந்தனர்.ராஜேந்திரனை சுற்றிச் சூழ்ந்த கொண்டு சரமாரியாக அரிவாள்களால் வெட்டினர்.
இதில் ராஜேந்திரன் துடிதுடித்து இறந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜேந்திரனின்உறவினர்களும், கிராம மக்களும் ஏழுமலையின் ஆதரவாளரான ராஜா என்பவரின் வீட்டை தீவைத்துக்கொளுத்தினர். இதில் வீடும், மாட்டுத் தொழுவும் எரிந்து தீக்கிரையானது.
கிராமம் முழுக்க பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகி விட்டஏழுமலை மற்றும் 10 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications