வாக்கு சீட்டு வந்தது எப்படி?-அதிமுகவுக்கு கேள்வி
சென்னை :சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்கள் அதிமுகவினர் கைக்குவந்தது எப்படி என்று அதிமுக வழக்கறிஞர் ஜோதியிடம் சென்னை உயர்நீதிமன்றநீதிபதி கோபத்யாயா கேள்வி எழுப்பினார்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை நடந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில்ஜோதி ஆஜரானார். அவர் வாதத்தைத் தொடங்கியபோது குறுக்கிட்ட நீதிபதிகோபாத்யாயா,
17 வாக்குச் சாவடிகளில் முறைகேடு மற்றும் வன்முறை நடந்ததாக கூறுகிறார்கள்.பிறகு ஏன் மாநகராட்சிக்குட்பட்ட 3295 வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறீர்கள்?
முறைகேடு நடந்ததாக வாக்குச் சீட்டுக்களை காட்டியுள்ளீர்கள். இந்த வாக்குச்சீட்டுக்கள் உங்களிடம் எப்படி வந்தன என்று நீதிபதி கேட்டார். தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications