அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர்உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குவஹாத்தி நகரின் பேன்ஸி பஜார் மற்றும் நூன்மாதி ஆகிய இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தகுண்டுவெடிப்பு நடந்தது. உல்பா தீவிரவாதிகள் இதற்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதல் குண்டுவெடிப்பு நூன்மாதி பகுதியில் நடந்தது. இதில், 4 பேர் இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.அடுத்த 15 நிமிடங்களில் பேன்சி பஜார் பகுதியில் அடுத்த குண்டுவெடிப்பு நடந்தது.
இங்கு நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 45 பேர் காயமடைந்தனர். சைக்கிளில் கட்டப்பட்டிருந்தகுண்டு வெடித்ததில் இந்த சம்பவம் நடந்தது.
இச்சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குண்டுவெடிப்புக்கு பிரதமர்மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.