மது: சிக்கிய பெண் சாப்ட்வேர் என்ஜீனியர்கள்
சென்னை:சென்னையில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த போலீஸ் சோதனையில் ஏராளமான பெண் சாப்ட்வேர்என்ஜீனியர்கள், கால் சென்டர் பெண்கள் பிடிபட்டனர். அவர்களை கடுமையாக எச்சரித்த போலீஸார் பின்னர்விடுவித்தனர்.
சென்னையில் உள்ள 30க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவில் மதுவுடன் கூடிய கேளிக்கைநிகழ்ச்சிகளும், ஆட்டம், பாட்டம் அமர்க்களப்படுவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
நள்ளிரவுக்கு மேல் மது பார்களை திறக்கக் கூடாது என்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்படுவதாகவும்போலீஸாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து நட்சத்திர ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தபோலீஸார் திட்டமிட்டனர்.
ஆயிரம் விளக்கு கிராண்ட் ஓரியன்ட், ராதாகிருஷ்ணன் சாலை சவேரா ஹோட்டல் ஆகியவற்றில் போலீஸார்அதிரடி சோதனை நடத்தினர். உதவி ஆணையர் ராமசுப்ரமணி தலைமையிலான போலீஸ் படை கிராண்டஓரியண்ட் ஹோட்டலில் ரெய்டு நடத்தியது.
நள்ளிரவைத் தாண்டி 1 மணி ஆகியும் கூடு சூடு குறையாமல் மது விருந்துடன், கேளிக்கை நிகழ்ச்சிகள்அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன. நடனம் ஆடிய பல பெண்களின் உடல்களில் உடைகள் பேருக்குத்தான்ஒட்டிக் கொண்டிருந்தன. இதையடுத்து ஹோட்டல் மற்றும் பார் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.அவர்களோடு மேலும் 14 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் ஜாமீனில்விட்டு விட்டனர்.
சவேரா ஹோட்டலில் நடந்த சோதனையில் 12 பேர் சிக்கினர். அவர்களையும் ஜாமீனில் விட்டு விட்டனர்.
சனிக்கிழமை இரவு நடந்த அதிரடி சோதனையில், ஏராளமான கால் சென்டர் பெண் ஊழியர்கள், பெண்சாப்ட்வேர் என்ஜீனியர்கள் மதுவுடன் ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. சில உயர் காவல்அதிகாரிகள் வீட்டுப் பெண்களும் இதில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களது வேலைப் பளுவிலிருந்து ஓய்வு பெறவே இவ்வாறு வந்தோம். இதை நாங்கள் ரெகுராக செய்வதில்லைஎன்று சாப்ட்வேர் என்ஜீனியர்களும், கால் சென்டர் பெண் ஊழியர்களும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்களை எச்சரித்து போலீஸார் விட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications