பாலீதின் பையில் குப்பையில் வீசப்பட்ட சிசு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சியில் பாலீதீன் பையில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி எடமலைப்புதூர் பகுதியில், உள்ள குப்பைத் தொட்டியில் பாலீதீன் பை ஒன்றைப் பார்த்த அப்பகுதிவழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், அந்தப் பையில் பிறந்து சில மணி நேரமே ஆன சிசுவின் உடல் இருந்தது. இதையடுத்துபோலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து அந்த பையை மீட்டு யார் இங்கே கொண்டு வந்துபோட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications