For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் அழகிய மணவாள ஜீயர் மரணம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அழகிய மணவாள ஜீயர் மடாதிபதி அழகிய மணவாள ஜீயர் மரணமடைந்தார்.
அழகிய மணவாள ஜீயர் சிறிது நாட்களாக உடல் நலமின்றி இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை அருகேபோரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. ஜீயருக்கு வயது 79.
அழகிய மணவாள ஜீயர் மடம் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த மடத்தின் 19வது மடாதிபதியாக மணவாளஜீயர் இருந்தார். ஜீயரின் மறைவுச் செய்தி அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வந்து ஜீயர் உடலுக்குஅஞ்சலி செலுத்தினர்.
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள டோல்கேட் தோட்டத்தில் வைணவ முறைப்படி ஜீயரின் உடல் அடக்கம்நடைபெற்றது.
Comments
Story first published: Monday, November 6, 2006, 5:30 [IST]