சதாமுக்கு தூக்கு: கருணாநிதி-ஜெ எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு திமுக தலைவரும்,முதல்வருமான கருணாநிதி அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைப் புத்தகத்தில் சில பக்கங்களை நீக்குவது போலாகும்.ஆனால் இதன் மூலம் திருந்திய பக்கங்களை மறு பதிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடுகிறது.

இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சதாம் உசேன் போன்ற சர்வாதிகளுக்கும் கூட பொருந்தும் என்றுகூறியுள்ளார்.

முன்பு, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது மரணதண்டனை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.ஜெ கண்டனம்:

சதாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈராக் நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது நீதியை கேலிக்கூத்தாக்கிபோலி நாடகம் அரங்கேறியிருப்பதையே காட்டுகிறது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு நாட்டில் அமெரிக்காவால் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் இதைத் தவிர வேறுதீர்ப்பை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்காவின் கைப்பாவையாக நீதிமன்றம் செயல்பட்டுள்ளது.

விசாரணையின்போது ஏராளமான எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 முறைநீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். நீதித்துறையை இவ்வாறு தவறாக பயன்படுத்தியகை இந்திய அரசு வன்மையாககண்டிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு ஏற்கக் கூடியதே அல்ல.

நான் மட்டுமல்ல நீதி, சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+