திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் எச்சரிக்கை மணி
மதுரை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் ரெளடிகள் மூலம் ஜனநாயக படுகொலை நடத்தியதிமுக, அரசுக்கு எதிரான எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறையை கண்டித்து மதுரை தபால்தந்திஅலுவலகம் முன் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் வரதராஜன்பேசுகையில்,
சென்னை மாநகராட்சி தேர்தலில் பெரும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது.அங்கு ஜனநாயகத்திற்கு புறம்பான கொடுமையான செயல்கள் நடந்ததை திமுகதலைமைக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
தேர்தலின்போது "தொழில் முறை ரெளடிகள் கார்களில் ஒவ்வொரு பூத்தாக சென்றுஅதிகாரிகளை மிரட்டி வெளியேற்றினர். ரவுடிகளே ஓட்டுக்களை போடுகின்றனர்.ரெளடிகள் சென்ற பிறகு பூத்களுக்கு வந்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர் போலீசார்.
மதுரை உட்பட சில இடங்களில் ஆளுங்கட்சியினருக்கும், எதிர்கட்சியினருக்கும்அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால்சென்னையில் நடந்தது திமுகவின் திட்டமிட்ட ஜனநாயக படுகொலை.
அராஜக அதிமுக, ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தான் திமுககூட்டணியில் சேர்ந்தோம். மக்களவை தேர்தல், சட்டசபைத் தேர்தலில் சர்வாதிகாரமா?ஜனநாயகமா? என்பதை முன் வைத்து பிரசாரம் செய்தோம். இதனால் அதிமுக அரசுஅகற்றப்பட்டது.
இன்று திமுக அரசு சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. அதைவரவேற்கிறோம். அதே நேரத்தில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த ஜனநாயகபடுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் திமுக அரசுக்கான எச்சரிக்கை மணி. இந்த அரசுக்குஏற்பட்டுள்ள கரும்புள்ளியை திமுக, துடைக்க முயற்சிக்க வேண்டும். சென்னையில்வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள், திமுக, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட வார்டுகளில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications