இடிய ஆரம்பித்தது சென்னை சில்க்ஸ்
சென்னை:சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெறாத தளங்களை இடிக்கும் பணி இன்று மீண்டும் முழு வீச்சில்தொடங்கியது.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் 5, 6மற்றும் 7வது தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அந்த்தளங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சென்னை சில்க்ஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த மனுவைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அப்பீல்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தளங்களை இடித்துத் தள்ளஉத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3 தளங்களையும் இடிக்கும் பணிதொடங்கியது. ஆனால் இடையில் தீபாவளி மற்றும் தொடர் மழை குறுக்கிட்டதால் இடிக்கும் பணி தற்காலிகமாகநிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இடிக்கும் பணி தொடங்கியது. முன்னதாக 3 தளங்களையும் இணைக்கும்தூண்களை கீழ் தளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் எப்படி இடிப்பது என்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்தனர்.












Click it and Unblock the Notifications