பெட்ரோல், டீசல் விலை குறையலாம்?
டெல்லி:பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
சர்வதேச மார்க்கெட்டில் தற்போது கச்சா எண்ணையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கடுமையாகஉயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு வாய் திறக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இக்கோரிக்கை குறித்துமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச சந்தையில்கச்சா எண்ணையின் விலை குறைந்திருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து முதலில் ஆராயவேண்டும்.
விலை குறைவு நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில்பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து, பரிசீலித்து வருகிறது என்றார்தியோரா.
கச்சா எண்ணை விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடுத்தடுத்து மத்திய அரசு முன்புஉயர்த்தியது. இப்போது, கச்சா எண்ணையின் விலை குறைந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவேண்டும் என்று மக்கள் மத்தியில் எண்ணம் எழுந்துள்ளது. எனவே இக்கோரிக்கையை மத்திய அரசுபுறந்தள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications