சதாமுக்கு தூக்கு: விஜய்காந்த் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதுமனிதாபிமானமற்ற செயல் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதுமனிதாபிமானமற்ற செயல். கோர்ட்டில் சதாம் உசேன் முன் வந்து வழக்காடினார்.கோர்ட் அதை புறக்கணித்தது மட்டுமல்ல, அவர் சார்பான வாதங்களையும் கவனத்தில்எடுத்துக் கொள்ளவில்லை.

சதாம் உசேனுக்கு அளித்த தூக்கு தண்டனை நியாயம் அற்றது என்ற உணர்வே உலகமக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. மேலை நாடுகளின் நிர்பந்தத்தால் அவருக்குதூக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவே மக்கள் கருதுகின்றனர்.

சதாம் உசேன் சார்பாக வாதாடிய வக்கீல்களும் இதே கருத்தைவெளிப்படுத்தியுள்ளனர். நீதி வழங்கினால் மட்டும் போதாது. நியாயமான முறையில்நீதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்கொப்ப நீதி வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஆகவே சதாம் உசேனுக்குஅளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து, நியாயமானவிசாரணைக்கு வழிவகுப்பதே முறை.

இந்த சூழ்நிலையில் அவருக்கு வழங்கிய தீர்ப்பை கண்டிப்பது மட்டுமல்ல. அதனால்,ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் அமளி, உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்பதைமேலைநாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+