ஓவர் டேக்: உருண்ட பஸ்-18 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சி அருகே மான்பிடிமங்கலம் என்ற இடத்தில் முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற அரசுப் பேருந்துஉருண்டு கவிழ்ந்தது. இதில் 11 பெண்கள் உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் அந்த அரசுப் பேருந்து தெற்கு சித்தாம்பூர் என்ற இடத்திற்குச்சென்றது. மான்பிடிமங்கலம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற பேருந்தைமுந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் முயன்றார்.

படு வேகமாக அவர் முந்திச் செல்ல முயன்றதில் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து, உருண்டு விழுந்தது. இதில்பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகள் 18 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.

அவர்களை உள்ளூர் கிராம மக்கள் சேர்ந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் 3 பேர்பள்ளிக் குழந்தைகள். அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மண்ணச்சநல்லூர், திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+