மீண்டும் புயல் சின்னம்-தமிழகத்தில் மழை கொட்டும்
சென்னை:வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில்மீண்டும் பயங்கர காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த அக்போடபர் 3ம் வாரத்தில் இருந்து தமிழகத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இந் நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக வலுத்தது. இதனால் மழை தீவிரமடைந்தது. அந்தபுயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது.
இந் நிலையில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவானதால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டித்தீர்த்தது. இந்த புயல் சின்னம் வலுவடைந்த நிலையில் இப்போது மீண்டும் புதிதாக ஒரு புயல் சின்னம்உருவாகியுள்ளது.
இது சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளிலும்தமிழகத்தின் உட் பகுதிகளிலும் மழை தொடரவுள்ளது. மேலும் வட கிழக்கு திசையில் இருந்து சூறாவளிக் காற்றும்வீசும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில்பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தமிழக அரசுஎச்சரித்துள்ளது.