For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சதாமுக்கு அடுத்த மாதம் தூக்கு?

By Staff
Google Oneindia Tamil News

Saddam Husseinபாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாதில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஈராக்கில் அவரதுஆதரவாளர்களும், சன்னி பிரிவினரும், வரவேற்று ஷியா பிரிவினரும் கடும்வன்முறையில் குதித்துள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் மோதல்கள் நடந்துவருகின்றன.

இந் நிலையில் பாக்தாத் நகருக்கு அருகே உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம்வசிக்கும் கிரேயத் மாவட்டத்தில் உணவு விடுதி ஒன்றில் புகுந்த மனித வெடிகுண்டுநபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 17 பேர்உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேபோல அகமதியா மாவட்டத்தில் (இங்கு சன்னி பிரிவினர் அதிகம்) பெரும்கலவரம் மூண்டது. பாதுகாப்புப் படையினருக்கும் சதாம் ஆதரவாளர்களுக்கும்இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறந்தனர்.26 பேர் காயமடைந்தனர்.

அடுத்த மாதம் தூக்கு?:

இதற்கிடையே, அடுத்த மாதம் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனைநிறைவேற்றப்படும் என ஈராக் பிரதமர் நூரி மாலிகி கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

ஈராக் சட்டப்படி ஒருவர் மீது பல வழக்குகள் இருந்தாலும், ஒரு வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டால் மற்ற வழக்குகளுக்காக காத்திருக்காமல் தண்டனையைநிறைவேற்றலாம்.

தற்போது சதாம் மீதான தூக்குத் தண்டனை குறித்த தீர்ப்பு மேல் முறையீட்டுக்குச்சென்றுள்ளது. அது அனேகமாக 20 நாட்களுக்குள் முடிந்து விடும். அப்படிமுடிந்தவுடன், அதாவது அடுத்த மாதத்திற்குள் சதாமை தூக்கிலிட திட்டமிட்டுள்ளோம்.

யார் வற்புறுத்தினாலும் தீர்ப்பில் மாற்றம் இருக்காது. ஈராக்கின் நீதி அமைப்பை மற்றநாடுகள் மதிக்க வேண்டும் என்றார் மாலிகி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X