For Daily Alerts
Just In
நர்சுகளுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுதாகார மையங்களில் பணியாற்றும்செவிலியர்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்களில் மாதம் ரூ. 2,500 தொகுப்பூதியத்தில் பணியாற்றும்செவிலியர்கள் 2,636 பேருக்கு பணி மூப்பு அடிப்படையில் ரூ. 5000-150-8,000என்ற விகிதக் கணக்கில் ஊதிய உயர்வு அளிக்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
இதேபோல குழந்தை பேறு சார்ந்த நலத் திட்டம், சுகாதாரத் திட்டம் போன்றவற்றின்கீழ் பணியாற்றும் 2,540 செவிலியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருவதாகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, November 8, 2006, 5:30 [IST]