பாபுவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்
சிட்னி:பசிபிக் கடலில் உள்ள பாபுவா நியூகினியா தீவில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்தநிலநிடுக்கம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா அருகே உள்ளது பாபுவா நியூகினியா தீவு. இதன்நியூ பிரிட்டன் தீவுக்கு அருகே கடலில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு6.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்தத் தீவில் ஏராளமான சிறு சிறு கிராமங்கள்உள்ளன.
இந்தக் கிராமங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாதுஎன்பதால் இந்தக் கிராமங்களை சென்றடையவே பல நாட்கள் ஆகும்.
எனவே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை.
கடந்த 1998ம் ஆண்டு இப்பகுதியில் சிறிய அளவிலான சுனாமி அலைகள்தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
ஆனால், இப்போதைய பூகம்பத்தால் சுனாமி அலைகள் ஏற்பட சாத்தியம் இல்லைஎன்று பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
நியூ பிரிட்டன் தீவில் உள்ள கண்டாரின் என்ற நகருக்கு அருகே பூகம்பத்தின் மையம்இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.