தியானம் கற்பிக்க சென்னை வரும் ஸ்ரீரவிசங்கர்
சென்னை:ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீரவிசங்கர் தியானம், பிரணயாமமஉள்ளிட்டவை குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளார்.
ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் என்ற தலைப்பில் டிசம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்களுக்குஅண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளார் ரவிசங்கர். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றபயிற்சி வகுப்பில் ரவிசங்கர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அகிலா சீனிவாசன் செய்தியாளர்களிடம்கூறுகையில், சென்னை நகர மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. ரவிசங்கரே நேரடியாக தியானம் குறித்தும்பிரணயாமம் குறித்தும் விளக்கம் அளிப்பதை கேட்க இது நல்ல வாய்ப்பாகும்.
15 வயதுக்கு மேட்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பு ஆர்ட் ஆப் லிவிங்அமைப்பின் பயிற்சி வகுப்புகள் எதிலும் கலந்து கொள்ளாதவர்களும் இதில் பங்கேற்கலாம்.
வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும் அறிவியல் முறைகள், தியானம், பிரணயாமம் உள்ளிட்டவை குறித்துரவிசங்கர் போதிப்பார். சுத்தமான, வியாதிகளற்ற உடல்தான் நிம்மதியான வாழ்க்கைக்கு, சந்தோஷத்திற்குஅடிப்படையாகும்.
நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருந்தால்தான் நாம் விடும் மூச்சும் அடுத்தவரை பாதிக்காது. சலனமற்ற,கவலைகளற்ற சிந்தனைதான் நல்ல ஆத்மாவுக்கு முதல் படி. அதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அகிலா சீனிவாசன்.












Click it and Unblock the Notifications