For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு.ஏ.இ-இந்திய தூதரகத்தின் ஆலோசனை மையம்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர்கள் அதிகளவில் தற்கொலை செய்து வருவதைத்தடுக்க மன நல ஆலோசனை பிரிவுகளை தொடங்க இந்தியத் தூதரகம் முடிவுசெய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கான இந்தியத் தூதர் சி.எம்.பண்டாரி இதுகுறித்துக்கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு இந்திய சமூகஅமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த ஆலோசனைப் பிரிவுகள் தொடங்கப்படும்.

24 மணி நேரமும் இந்த பிரிவுகள் இயங்கும். அரபு நாடுகளில் வேலை பார்க்கும்இந்தியர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து இங்கு ஆலோசனை பெறலாம்.

மேலும் தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு 15 தன்னார்வ மருத்துவர்கள்சென்று தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிவார்கள். மன அழுத்தம், சர்க்கரைவியாதி உள்ளிட்ட பிரச்சினைகள் தொழிலாளர்களிடையே உள்ள பொதுவானபிரச்சினைகளாகும். இவற்றுக்கு சிறந்த தீர்வை அவர்கள் வழங்குவார்கள் என்றார்.

திருச்சி-துபாய் விமான சேவை:

இதற்கிடையே திருச்சி-துபாய், திருச்சி-குவைத், திருச்சி-சிங்கப்பூர் இடையே வரும் டிசம்பர் 9ம் தேதி முதல்நேரடி போயிங் விமான சேவையைத் தொடங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X