தொழில் வளர்ச்சி: கருணாநிதி தலைமையில் குழு
சென்னை:தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டை அதிகரிக்கவும், தொழில்துறையினரின் பிரச்சனைகளைக் களையவும்முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் துணைத் தலைவராகதலைமைச் செயலாளர் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறையின் சீரான வளர்ச்சிக்கு வழி வகுக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் தொழிலதிபர்களான டிவிஎஸ் நிறுவன அதிபர் வேணு சீனிவாசன், எம்.ஏ.எம்.ராமசாமி, இந்தியாசிமெண்ட் துணைத் தலைவர் சீனிவாசன், ஆரூரான் சர்க்கரை ஆலை அதிபர் ராம் தியாகராஜன், மெட்ராஸ்சிமெண்ட்ஸ் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா,
ரசாயன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் பணிக்கர், தோல் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்ரபீக் அகமத், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் அமைப்பின் தலைவர் எம்.மாணிக்கம், திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல், அகில இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைர் சஞ்சய்ஜெயவர்த்தனவேலு, தென் இந்திய மில்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம், உதிரிபாக உற்பத்தியார்கள் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
நிதித்துறை மற்றும் வணிக வரித்துறையின் செயலாளர்கள் இந்தக் குழுவின் செயல் உறுப்பினர்களாகஇருப்பார்கள்.