நிரம்பும் வைகை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
மதுரை:தொடர் மழையால் வைகை அணை அதன் முழுக் கொள்ளவை எட்டி வருவதால் அதன் 14 மதகுகளும்திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்ஆகிய 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையின் மொத்த கொள்ளவு 71 அடி. இதில் 69 அடியை நீர் எட்டிவிட்டது. மேலும் விடிய விடிய மழைபெய்ததால் தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் மஞ்சளாறு, வராக நதியில் இருந்தும்வைகை அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 3,244 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 5மாவட்டங்களிலும் வைகை கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
மேலும் கரையோரப் பகுதிகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் குறுக்கேஉள்ள தரைப் பாலங்கள் மற்றும் கரையோரப் பகுதிகள் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையில் பணியாற்றும் பொதுப்பணித்துறையினரின் விடுமுறைகள் ரத்து