For Daily Alerts
Just In
முன்னாள் மலேசிய அதிபர் மகாதிருக்கு மாரடைப்பு
கோலாலம்பூர்:மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவை 22 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முக்கியமான தலைவர் மகாதிர். நாட்டின் பொருளாதாரவளர்ச்சியை பன்மடங்கு அதிகரித்து மலேசியாவை தெற்காசியாவின் முக்கிய நாடுகளில் ஒன்றாக மாற்றிக்காட்டியவர்.
பதவி விலகிவிட்டாலும் கூட அரசியலிலும், ஆட்சியிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். நாட்டின் முக்கியஎண்ணெ ய் நிறுவனமான பெட்ரோனாஸ், கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டான் ஆகியவற்றை இன்றும் கூடமகாதிர் தான் வழி நடத்தி வருகிறார்.
இந் நிலையில் இன்று காலை அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோலாலம்பூரில்உள்ள தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Wednesday, November 8, 2006, 5:30 [IST]