புத்த மதத்திற்கு மாறிய 30 லட்சம் தலித்துக்கள்
டெல்லி:நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்குமாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம்மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குமாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பெளத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிரமாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.
இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்தமதத்திற்கு மாறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மைஅமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவேசெய்யும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications