அமெரிக்க முருகன் கோவிலில் பக்தர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
மேலிலேண்ட்:அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிவுஏற்பட்டதால் அதை நுகர்ந்த 12 பக்தர்கள் மயக்கமடைந்தனர்.
மேரிலாண்டில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாமி கும்பிடுவதற்காக ஏராளமான பக்தர்கள்வந்திருந்தனர். அவர்களில் 12 பேர் திடீரென மயங்கி விழுந்தார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவலதரப்பட்டது. 12 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் 4பேருக்கு கோவிலை விட்டு வெளியே வந்தவுடனேயே மயக்கம் தெளிந்து விட்டது. மற்றவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கார்பன் மோனாக்சைடு வாயு கசிவால் தான் இந்த சம்பவம் நடந்தது என விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications