நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் சிலை
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச் சிலையை வருகிற 23ம்தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் ஏற்கனவே உள்ளன. இந்த நிலையில் முரசொலிமாறனின் முழு உருவச் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
வருகிற 23ம் தேதி மாறனின் 3வது நினைவு தினம் வருகிறது. அன்றைய தினம் சிலையைத் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில், முரசொலி மாறனின் முழு உருவ வெண்கலச் சிலைடிசம்பர் 23ம் தேதியன்று திறந்து வைக்கப்படும். முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளோம். சில வழக்கமான நடைமுறைகளைபூர்த்தி செய்த பிறகு அனுமதி வழங்கப்படும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications