கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குள் வெள்ளம்
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் மாவட்டத்தின் அனைத்து அணைகளும்,குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிற்றாறு, உப்பாறு ஆகிய ஆறுகளின் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. மேலும் மேல பிள்ளையார்குளம்,துத்திகுளம், முத்தன்குளம், வெள்ளாளன் குளம், புதூர், காங்கேயன் குளம், சீதபற்நல்லூர், பகினாலாம்பேரிக்குளம்,வடக்கு செழியநல்லூர் குளம் உள்பட பல குளங்கள், கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகளில்வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
வெள்ளாளன் குளம் உடைந்து நீர் வெளியேறியதில் நெல்லை-தென்காசி சாலை நீரில் மூழ்கியது. இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீரப்பட்டி குளம் உடைந்து அந்த நீர் கட்டப்பட்டு வரும் கூடங்குளம்அணு மின் நிலையத்தின் துணை மின் நிலையத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கு கட்டடப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.
நீரை வெளியேற்ற மின் நிலையத்தின் சுவர் உடைக்கப்பட்டுள்ளது.
மேலும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. மளை நீர் சூழ்ந்ததால்பல்கலைக்கழக்கத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன மாணவ, மாணவிகள்வெளியேற்றப்பட்டனர்.
முத்தான் குளம் உடைந்ததில் ஆதிதிராவிடர் காலனிக்குள் நீர் புகுந்து 25 வீடுகள் நீரில் மூழ்கின. தகவல் அறிந்தமாவட்ட நிர்வாகம் அந்த தலித் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி கல்யாண மண்டபத்தில் தங்க வைத்துள்ளது.
சீவலப்பேறி அருகே உள்ள பாலமும் நீரில் மூழ்கிவிட்டது.












Click it and Unblock the Notifications