எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன்சென்னையில் இன்று மரணமடைந்தார்.
86 வயதாகும் வல்லிக்கண்ணன் சில நாட்களாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவல்லிக்கண்ணன் ஏராளமான சிறுகதைகள்,புதுக் கவிதைகளைப் படைத்துள்ளார். அவரது புதுக் கவிதைகள் தோற்றமும்வளர்ச்சியும் என்ற நூல் மிகவும் பிரபலமானது.
சாகித்ய அகாடமி, தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது உள்ளிட்ட பலவிருதுகளை அவர் பெற்றுள்ளார்.
வல்லிக்கண்ணனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை பெசன்ட் நகர் இடுகாட்டில்நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications