மதுரை, கோவை, ஈரோட்டில் பேய் மழை!
மதுரை:மதுரை, கோவை, ஈரோட்டில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால்மூன்று நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரில் நேற்று விடிய விடிய கன மழை பெய்தது. மழை நீர் மற்றும் வைகைஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ள நீர் ஆகியவை காரணமாக நகரின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மதுரையில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார். வைகை ஆற்றில்வெள்ளம் கரைபுரண்டோடி வருவதால் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் மக்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆற்றோரம் உள்ள செல்லூர் உள்ளிட்ட சில பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர்புகுந்தது. இதேபோல கோவையிலும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் பலகுளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
ஈரோட்டிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை மழை வெளுத்து வாங்கியது.இதனால் பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைவெள்ளம் காரணமாக 1800 குடிசைகள் நீரில் மூழ்கின.
அங்கு வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் அருப்புக்கோட்டை, மணியாச்சியில் அதிகபட்சமாக 9 செமீமழை பெய்துள்ளது.
சென்னை நகரில் இன்று காலை மழை சற்றே ஓய்ந்தது. இருப்பினும் பிற்பகலுக்குமேல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாககாணப்படுகிறது. லேசான தூறலும் காணப்படுகிறது.
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம்அதே இடத்தில் தொடர்ந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும்பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications